உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி

 

பாடல 21 - 25 எளிய விளக்கம்

 

21 . சுஷுப்தி எனப்படும் ஆழ்ந்த தூக்கத்தில் ( Deep sleep state ) நான் என்பது இல்லை.  

        அனால் நம் இருப்பு இடைவிடாமல் எப்போதும் உள்ளது. ஆகவே எப்போதும்

        உள்ளது எதுவோ அதுவே உண்மையான 'நான்' ஆகும்.



22 .  உடல், மனம் , உள்ளம், உயிர், இருள் இவை அனைத்தும் ஜடம். இவை அசத்

        எனப்படும் உண்மை அற்றவை. இவை அனைத்துமே 'நான்' ஆகமாட்டா . 'நான்'

        மட்டுமே 'சத்' எனப்படும் 'உண்மை' 


 23 .  உண்மை எனப்படும் 'சத்' யாதெனில், உணர்வு எனப்படும் 'சித்' என்பதே. இந்த

          உணர்வே (Consciousness) நாம்..

 


24 .  இயற்கையில் இறைவனும் (GOD) ஜீவர்களும்( SOULS ) ஒரு பொருளே. உபாதி உணர்வு

        மட்டுமே வேறு வேறு. ( உபாதி -  Limitations)

 


25 .  தன்னுடைய உபாதிகளை ( Limitations)  விட்டு தன்னை உணர்வதே 'இறைவனை'

       அறியும் வழி. இது ஆறு கடலுடன் கலப்பது போன்றும்,  உப்பு பொம்மை கடலில் 

       கரைவதற்கு ஒப்பாகும்.  ஜீவன், இறைவனில் ஒன்றியபிறகு 'நான்' (Self), இறைவன்

       (God) வெவ்வேறு அன்று. பிறகு இறைவன் நம்மில் ஒளிர்வார்.

 

 

HOME