உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் - 19
நானென் றெழுமிட மேதென
நாடவுண்
ணான்றலை சாய்ந்திடு முந்தீபற
ஞான விசாரமி துந்தீபற. [19]
நான் என்று எழும் இடம் ஏது என நாடவும்
நான் தலை சாய்ந்திடும் உந்தீ பற
ஞான விசாரம் இது உந்தீ பற.
விளக்கம்
' நான் என்று எழும் இடம் எது?' என ஆராய்ந்தால்,
'நான்' என்பது அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்'
விளக்க உரை
ஆத்ம விசாரத்தில் ( Self Enquiry ) ஈடுபட்டு
' நான் யார்' ( Who am I ) என்ற கேள்விக்கு விடை காணும் போதுதான் ஒருவன் தன்னை பற்றிய சுய அறிவு
( Self Knowledge ) பெறுகிறான்.
ரமணர் மனதின் அடிப்பட்டை ' நான்' என்ற எண்ணமே என்கிறார். ' நான் யார் ' என்பதை அடிப்படையை ஆராயும் போது ' அகங்காரம் ' (Ego ) அதனுடன் ஒன்றுவதால், அகங்காரம் அழிந்து போகும். மேலும் 'நான்' என்பதை தொடர்ந்து ஆராய்வதால் ' நான்' என்பதும் அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்.
நான் ( I ) என்ற எண்ணம் ' உணர்வை '
( Consciousness ) அடைவது நாய் தன் எஜமானை அதன் மோப்ப சக்தியின் மூலம் சென்றடைவது போன்றது. மனமும்
( Mind ) தகனத்தை கிளரும் குச்சி தகனத்திலேயே எரிந்து போவது போல அழிந்து போகும்.