உபதேச சாரம் - பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி
பாடல் 16 - 20 எளிய விளக்கம்
16 . மனமானது வெளி விஷயங்களை விடுத்து மூலாதாரமான உணர்வுநிலையில் ( Consciousness )
எப்போதும் இருப்பு கொள்வதே உண்மையான அறிவு.
17 . மனத்தின்
உருவத்தை
மறதியின்றி
ஆராய்ந்தால் ,
மனம் என்ற
ஒன்று இல்லை
என்பது
விளங்கும்.
18 .
மனம் என்பது
பலவகை
எண்ணங்களின்
தொகுப்புக்கான
பொதுவான பெயர்.
இதில் 'நான் -
உடல் ' என்ற எண்ணமே மற்ற எல்லா எண்ணங்களின் மூல காரணம்.
19 . ' நான்
என்று எழும்
இடம் எது?' என
ஆராய்ந்தால்,
'நான்' என்பது அழிந்து போகும். இதுவே 'ஞான விசாரம்'
20 . 'நான்' என்ற எண்ணம் அழியும் போது, மற்றொரு 'நான்' 'இதயமாக' உருவெடுக்கும். இதுவே
இருப்பு (Existence ) மற்றும் 'முழுமை' (Fullness ) ஆகும்.